பதிவு செய்த நாள்
23
ஏப்
2019
12:04
கண்டாச்சிபுரம்:கண்டாச்சிபுரம் அடுத்த சித்தாத்தூர் சிவசுப்ரமணியசுவாமிகள் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.கண்டாச்சிபுரம் அடுத்த சித்தாத்தூரில், வள்ளி தேவசேனா சமேத சிவசுப்ரமணியர் சுவாமிகள் கோவிலில் நேற்று (ஏப்., 22ல்) காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது. நேற்று (ஏப்., 22ல்) காலை 5 மணிக்கு 4ம் கால யாகசாலை பூஜைகளும், கோபூஜை,யாத்ராதானம் மற்றும் பூர்ணாஹூதி யாகங்கள் நடைபெற்றது.
இதைத்தொடர்ந்துசெல்வவினாயகர்,வேணுகோபால்,ஆஞ்சநேயர்,கெங்கையம்மன் ஆகிய கோவில்களின் பரிவார தெய்வங்கள் மற்றும் விமானங்களுக்கு,காலை 9:30 மணிக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதில் சித்தாத்தூர், கண்டாச்சிபுரம்,ஆலம்பாடி,கெடார் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா நாராயணசாமி மற்றும் கிராம பொதுமக்கள் செய்துள்ளனர்.