பதிவு செய்த நாள்
23
ஏப்
2019
03:04
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம், வரதராஜப்பெருமாள் கோவில், வைகாசி பிரம்மோற்சவம், மே, 17ல், கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
காஞ்சிபுரத்தில், சிறப்பு பெற்று விளங்கும் வரதராஜப்பெருமாள் கோவிலில், வைகாசி பிரம்மோற்சவம், 10 நாட்கள், விமரிசையாக நடைபெறும்.
இந்தாண்டு விழா, மே, 17ம் தேதி காலை, 4:30 - 5:30 மணிக்குள் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இந்த திருவிழாவின் முக்கிய உற்சவமான கருட சேவை, 19ல் நடைபெறகிறது. அன்று அதிகாலை கோபுர தரிசனம் நடைபெறும்.
தங்க கருட வாகனத்தில் எழுந்தருளும் வரதரை காண, ஆயிரக்கணக்கான பக்தர்கள், அதிகாலையில் இருந்து, வழியெங்கும் காத்திருப்பர்.டி.கே.நம்பி சாலை வழியாக, ரங்கசாமி குளம், விளக்கொளி பெருமாள் கோவிலில் தேசிகர் சன்னிதி முன், வரதராஜ பெருமாள் எழுந்தருள்வார். அங்கு, பெருமாளுக்கு மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெறும்.
தொடர்ந்து, அங்கிருந்து பிள்ளையார்பாளையம், புத்தேரி தெரு வழியாக சென்று, கச்சபேஸ் வரர் கோவில் முன் எழுந்தருள்வார். மே, 23ல், தேர் திருவிழாவும், 25ல் அனந்த சரஸ் திருகுளத்தில் தீர்த்தவாரியும் நடைபெறும். 26ம் தேதியுடன், வைகாசி பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது.