Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வன்னிய பெருமாள் கோவில் பிரம்மோற்சவ ... ராமச்சந்திர மூர்த்தி பட்டாபிஷேக உற்சவம் ராமச்சந்திர மூர்த்தி பட்டாபிஷேக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோயிலுக்கு திரும்பிய அழகருக்கு திருஷ்டி கழித்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
கோயிலுக்கு திரும்பிய அழகருக்கு திருஷ்டி கழித்த பக்தர்கள்

பதிவு செய்த நாள்

24 ஏப்
2019
11:04

அலங்காநல்லுார்: மதுரை சித்திரை திருவிழாவில் பங்கேற்றுவிட்டு கோயிலுக்கு திரும்பிய கள்ளழகரை பக்தர்கள் திருஷ்டி பூசணிக்காய் சுற்றி வரவேற்றனர். அழகர்கோவில் கள்ளழகர் கோயில் சித்திரை திருவிழா ஏப்.,15ல் தொடங்கியது. 17ம் தேதி கள்ளழகர் தங்கபல்லக்கில் மதுரைக்கு புறப்பட்டார். 18ம் தேதி மூன்றுமாவடியில் எதிர்சேவை நடந்தது. 19ம் தேதி காலையில் தங்கக்குதிரை வாகனத்தில் வைகையாற்றில் எழுந்தருளினார்.  வண்டியூர், ராமராயர் மண்டபத்தில் தங்கி சேஷ, கருட வாகனத்தில் எழுந்தருளியும், தசாவதாரம் நிகழ்ச்சியில் பங்கேற்றும் 21ம் தேதி இரவு பூப்பல்லக்கில் புறப்பட்டார்.

நேற்று பகல் 12:00 மணிக்கு கோட்டைவாசல் பகுதிக்கு தங்கப்பல்லக்கில் அழகர்மலைக்கு சுவாமி திரும்பினார். இதையொட்டி 18ம்படி கருப்பணசுவாமி சன்னதி முன்பு விசேஷ பூஜைகளுடன், வையாழி நிகழ்ச்சியும், தீபாராதனையும் நடந்தது. பின் வாணவேடிக்கையுடன், மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் கோயில் யானை சுந்தரவள்ளி முன் செல்ல தங்கபல்லக்கு கோயிலுக்குள் சென்றது. அங்கு பக்தர்கள் ‘கோவிந்தா, கோவிந்தா’ என கோஷத்துடன் சுவாமிக்கு வண்ணமலர்கள் துாவி வரவேற்றனர். பின் 21 பூசணிக்காய்களில் கற்பூரம் ஏற்றிய பெண்கள் சுவாமியை சுற்றிவந்து திருஷ்டி கழித்தனர். ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி மாரிமுத்து மற்றும் கண்காணிப்பாளர்கள், பணியாளார்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் கூடாரவல்லி விழாவையொட்டி ஊஞ்சல் சேவையில் ... மேலும்
 
temple news
ஹிந்து மதத்தில், கடவுள்களுக்கு பல்வேறு விதமான வழிபாடுகள் நடைமுறையில் உள்ளன. அவற்றில் சில விசித்திரமான ... மேலும்
 
temple news
பெங்களூரை ஐ.டி., நிறுவனங்களின் தலைநகர் என்று கூறுவதுண்டு. இங்கு கப்பன் பூங்கா, லால்பாக் பூங்கா உட்பட, ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் உண்டியல் எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. அதில் ரூ.3.59 கோடி காணிக்கையாக கிடைத்தது. ... மேலும்
 
temple news
ஊட்டி: ஊட்டி புதிய அக்ரஹாரம் பகுதியில் உள்ள ஸ்ரீ வேணுகோபாலசுவாமி கோவிலில் கூடாரவல்லி நிகழ்ச்சி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar