Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வன்னிய பெருமாள் கோவில் பிரம்மோற்சவ ... ராமச்சந்திர மூர்த்தி பட்டாபிஷேக உற்சவம் ராமச்சந்திர மூர்த்தி பட்டாபிஷேக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோயிலுக்கு திரும்பிய அழகருக்கு திருஷ்டி கழித்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
கோயிலுக்கு திரும்பிய அழகருக்கு திருஷ்டி கழித்த பக்தர்கள்

பதிவு செய்த நாள்

24 ஏப்
2019
11:04

அலங்காநல்லுார்: மதுரை சித்திரை திருவிழாவில் பங்கேற்றுவிட்டு கோயிலுக்கு திரும்பிய கள்ளழகரை பக்தர்கள் திருஷ்டி பூசணிக்காய் சுற்றி வரவேற்றனர். அழகர்கோவில் கள்ளழகர் கோயில் சித்திரை திருவிழா ஏப்.,15ல் தொடங்கியது. 17ம் தேதி கள்ளழகர் தங்கபல்லக்கில் மதுரைக்கு புறப்பட்டார். 18ம் தேதி மூன்றுமாவடியில் எதிர்சேவை நடந்தது. 19ம் தேதி காலையில் தங்கக்குதிரை வாகனத்தில் வைகையாற்றில் எழுந்தருளினார்.  வண்டியூர், ராமராயர் மண்டபத்தில் தங்கி சேஷ, கருட வாகனத்தில் எழுந்தருளியும், தசாவதாரம் நிகழ்ச்சியில் பங்கேற்றும் 21ம் தேதி இரவு பூப்பல்லக்கில் புறப்பட்டார்.

நேற்று பகல் 12:00 மணிக்கு கோட்டைவாசல் பகுதிக்கு தங்கப்பல்லக்கில் அழகர்மலைக்கு சுவாமி திரும்பினார். இதையொட்டி 18ம்படி கருப்பணசுவாமி சன்னதி முன்பு விசேஷ பூஜைகளுடன், வையாழி நிகழ்ச்சியும், தீபாராதனையும் நடந்தது. பின் வாணவேடிக்கையுடன், மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் கோயில் யானை சுந்தரவள்ளி முன் செல்ல தங்கபல்லக்கு கோயிலுக்குள் சென்றது. அங்கு பக்தர்கள் ‘கோவிந்தா, கோவிந்தா’ என கோஷத்துடன் சுவாமிக்கு வண்ணமலர்கள் துாவி வரவேற்றனர். பின் 21 பூசணிக்காய்களில் கற்பூரம் ஏற்றிய பெண்கள் சுவாமியை சுற்றிவந்து திருஷ்டி கழித்தனர். ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி மாரிமுத்து மற்றும் கண்காணிப்பாளர்கள், பணியாளார்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி: அயோத்தி ராமர் கோயிலில் இன்று ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரளாவில் பிரசித்தி பெற்ற கோவில் திருச்சூர் வடக்குநாதர் கோவில். இங்கு எல்லா ஆண்டு சித்திரை ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் ஷீரடி சாய்பாபா கோயிலில் சாய்பாபா பிறந்தநாள் விழா மற்றும் ராம நவமி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் பணம் மற்றும் நகை என காணிக்கையை கொட்டி ... மேலும்
 
temple news
கோவை; கோவை மாவட்டம் அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரை மாதம் ஏகாதசியை முன்னிட்டு கோவிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar