Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பிளேக் மாரியம்மன் கோவிலில் இன்று ... ஊத்துக்குளி முத்துமாரியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சமயபுரம் கோவிலில் பூச்சொரிதல் விழா: அம்மன் 28 நாள் பச்சைப்பட்டினி விரதம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 மார்
2012
11:03

திருச்சி: சமயபுரம் மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா வரும் 11ம் தேதி துவங்குகிறது. அதையொட்டி, வரும் ஞாயிறு துவங்கி 28 நாட்களுக்கு மாரியம்மன் பச்சைப்பட்டினி விரதம் இருக்கிறார். உலக பிரசித்திப்பெற்ற சக்தி ஸ்தலங்களில், திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் சிறப்பானது. வேண்டுவோருக்கு வேண்டும் வரம் அளிக்கும், எல்லையில்லா அன்பு கொண்டவள் சமயபுரத்தாள். அதற்கு, தினந்தோறும் ஆயிரக்கணக்கில் குவியும் பக்தர்களே அத்தாட்சி. ஆண்டுதோறும் மாசி மாதம் கடைசி வார ஞாயிற்றுகிழமையில் அம்மனுக்கு பூச்சொரிதல் விழாவும், சித்திரை மாத முதல்வார செவ்வாய்கிழமையில் சித்திரைத்தேரோட்டமும் வெகு சிறப்பாக நடப்பது வழக்கம். இந்தாண்டு வரும் 11ம் தேதி, பூச்சொரிதல் விழா துவங்குகிறது. அன்று அதிகாலை கணபதி பூஜை, வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம் நடக்கிறது. காலை 8.19 மணிக்குமேல் 10.01 மணிக்குள், தேவஸ்தானம் சார்பில் பூச்சொரிதல் நடக்கிறது. முன்னதாக, கோவில் அதிகாரிகள், உள்ளூர் பிரமுகர்கள், பூத்தட்டுகள், பூக்கூடைகள் ஏந்தி, மேளதாளத்துடன் ஊர்வலமாக சென்று, மேஷ லக்னத்தில் காப்பு கட்டி, அம்மனுக்கு பூச்சொரிதல் (புஷ்பாபிஷேகம்) செய்யப்படுகிறது.

பச்சைப்பட்டினி விரதம்: உலக நன்மைக்காக, மாசி மாத கடைசி ஞாயிற்றுகிழமையில் இருந்து, பங்குனி மாதம் கடைசி ஞாயிற்றுகிழமை வரை, தொடர்ந்து 28 நாட்களுக்கு மாரியம்மன் பச்சைப்பட்டினி விரதம் இருப்பது வழக்கம். தன்னை நாடும் மக்களுக்காக மாரியம்மன் மேற்கொள்ளும் விரதத்தை பக்தர்கள் போற்றும்விதத்தில், அம்மன் மீது பூத்தூவி வழிபடும் வழக்கமே, காலப்போக்கில் பூச்சொரிதல் விழாவாக மாறியது. மாரியம்மன் விரதத்தின்போது, வழக்கமாக செய்யப்படும் தளிகை நைவேத்தியத்துக்கு பதிலாக துள்ளுமாவு, இளநீர், நீர்மோர், பானகம், கரும்பு போன்றவை நைவேத்யமாக படைக்கப்படுகிறது. அம்மனின் விரதத்தை போற்றும்வகையில், ஞாயிற்றுகிழமைகளில் வீடுகளில் "குளுமை என்ற பெயரில், இளநீர், நீர்மோர், பானகம் வைத்து படைத்து, ஊர்மக்களுக்கு வழங்குவது வழக்கமாக இருக்கிறது. விரதத்தின்போது அம்மன் உக்கிரம் அடையக்கூடாது என்பதுக்காக "குளுமை படைக்கப்படுகிறது என்பது ஐதீகம். விழா ஏற்பாடுகளை கோவில் இணை கமிஷனர் செல்வராஜ் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மாமல்லபுரம்; மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவிலில், நிலமங்கை தாயாருக்கு, புரட்டாசி வெள்ளி உற்சவம் ... மேலும்
 
temple news
அனுப்பர்பாளையம்; திருப்பூர், அடுத்த பெருமாநல்லூரில் புகழ்பெற்ற ஸ்ரீ கோவர்த்தனாம்பிகை உடனமர் உத்தம ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; துடியலூர் அருகே உள்ள நவாம்ச சஞ்சீவி ஆஞ்சநேயர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ... மேலும்
 
temple news
பழநி; பழநி பகுதியில் புரட்டாசி மாத சனிக்கிழமை பெருமாள் கோயில்களில் சிறப்பு அலங்காரம் அபிஷேகம் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் கோவில் அக்னி தீர்த்த படிக்கட்டுகள் சேதமடைந்து கிடப்பதால் பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar