பதிவு செய்த நாள்
24
ஏப்
2019
02:04
மங்கலம்பேட்டை : மங்கலம்பேட்டை அடுத்த எம்.அகரம் பெரியாயி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று முன்தினம் (ஏப்., 22ல்)நடந்தது.கடந்த 20ம் தேதி மாலை 6:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, முதல்கால யாகசாலை பூஜை, இரவு 9:30 மணிக்கு தீபாராதனை நடந்தது. 21ம் தேதி காலை 7:30 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை, காலை 11:00 மணிக்கு தீபாராதனை, மாலை 6:00 மணிக்கு மூன்றாம் கால யாகசாலை பூஜை, சிறப்பு ஹோமம் இரவு 10:00 மணிக்கு அஷ்டபந்தன மருத்து சாத்துதல் நிகழ்ச்சி நடந்தது.22ம் தேதி கும்பாபிஷேகத்தையொட்டி, காலை 6:00 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜை, காலை 8:30 மணிக்கு மஹா தீபாராதனை, காலை 9:00 மணிக்கு கடம் புறப்பாடு, காலை 9:30 மணிக்கு கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.ஏராளமானோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.