பதிவு செய்த நாள்
24
ஏப்
2019
03:04
ஊட்டி:ஊட்டி, காந்தள் மூவுலகரசி அம்மன் திருவிழா துவங்கி, நாள்தோறும் உபயதாரர்களின் சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது.
ஊட்டி காந்தள் மூவுலகரசி அம்மன் தேர் திருவிழா திருவிளக்கு பூஜை, மஹா சிறப்பு அபிஷேக த்துடன் நிகழ்ச்சி துவங்கியது. தொடர்ந்து, ஒவ்வொரு நாளும் பூச்சொரிதல், மங்கள ஷண்டி ஹோமம், காப்புகட்டுதல் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள் ஒவ்வொரு சமூகத்தினர் சார்பில் செய்து வருகின்றனர்.மே, 5 காலை, 8:00 மணிக்கு மஹா சிறப்பு அபிஷேகமும் பால்குட அபிஷேகம்; அம்மன் கோவில் வலம் வருதல் மற்றும் அன்னதானம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின், மாலை, 6:30 மணிக்கு, திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. மே, 10ம் தேதி மறுபூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் செய்து வருகின்றனர்.