பதிவு செய்த நாள்
25
ஏப்
2019
10:04
சென்னை: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கல்நது கொண்டனர்.
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில், ஆண்டு தோறும் சித்திரை மாதம், 10 நாள் பிரம்மோற்சவம் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டிற்கான பிரம்மோற்சவம், 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நாளான, இன்று (25ம் தேதி) தேர் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. காலை, 7:30 மணிக்கு, தேர் வடம் பிடிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். 26ம் தேதி, வெண்ணெய் தாழி கண்ணன் கோலத்தில், பல்லக்கு சேவை நடக்கிறது. 27ம் தேதி தீர்த்தவாரி உற்சவமும், அன்று இரவு, 7:30 மணிக்கு கண்ணாடி பல்லக்கு சேவையும் நடக்கிறது. 28ம் தேதி கொடி இறக்கத்துடன் விழா பூர்த்தியாகிறது. 29ம் தேதி முதல் மே., 8ம் தேதி வரை, விடையாற்றி உற்சவம் நடக்கிறது.