பதிவு செய்த நாள்
07
மார்
2012
12:03
நாமக்கல்: வையப்பமலைபுதூர் புடவைக்காரி அம்மன் கோவிலில், முப்பூஜை விழா நாளை (மார்ச் 8) துவங்கி, இரண்டு நாட்கள் நடக்கிறது. நாமக்கல் அடுத்த வையப்பமலை புதூரில், பிரசித்தி பெற்ற புடவைக்காரி அம்மன் மற்றும் வீரக்காரன் கோவில் உள்ளது. 200 ஆண்டு பழமையான இக்கோவிலில் ஆண்டு தோறும் முப்பூஜை விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு விழா நாளை (மார்ச் 8) துவங்கி, இரண்டு நாட்கள் நடக்கிறது. விழாவை முன்னிட்டு, நாளை (மார்ச் 8) இரவு 9 மணிக்கு ஊர் கிணற்றில் இருந்து சக்தி அழைத்து வருதல், ஸ்வாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து சிறப்பு பூஜை, ஆராதனை நடக்கிறது. இரவு 10 மணிக்கு சக்திபானை அழைத்து வருதல், நள்ளிரவு 12 மணிக்கு ஈனா பிறவை வெட்டி பச்சை படைத்தல், அதிகாலை 5 மணிக்கு சிறப்பு பூஜை நடக்கிறது. மறுநாள் இரவு 10 மணிக்கு கோவிலில் இருந்து, பொங்கல் பானையுடன் வீரகாரன் கோவிலுக்கு ஸ்வாமி அழைத்துச் செல்லப்படுகிறது. இரவு 11 மணிக்கு பொங்கல் வைத்து ஸ்வாமிக்கு சிறப்பு அலங்காரம், ஆராதனை நடக்கிறது. அன்று அதிகாலை 3 மணிக்கு கன்னிமார் அழைத்தல், பூஜையும், அதிகாலை 5 மணிக்கு ஆடுகள், பன்றிகள், கோழிகள் பலியிட்டு ஸ்வாமிக்கு, பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், ஊர் மக்கள் செய்துள்ளனர்.