பதிவு செய்த நாள்
25
ஏப்
2019
01:04
பொள்ளாச்சி : பொள்ளாச்சி, ஜமீன் ஊத்துக்குளி மாகாளியம்மன் கோவில் திருவிழாவில், பக்தர்கள் பூ குண்டம் இறங்கி அம்மனை வழிபட்டனர். ஜமீன் ஊத்துக்குளி மாகாளியம்மன் கோவில் திருவிழா கடந்த, 9ம் தேதி கும்ப ஸ்தாபனத்துடன் துவங்கியது. 11ம் தேதி கோவிலில் பூவோடு வைக்கப்பட்டது. அதையடுத்து, கொடுமுடி பழநி, நல்லுாத்து, கூடுதுறை, தெய்வகுளம், குளத்துார் அகத்துாரம்மன் கோவில்களில் இருந்து தீர்த்தம் கொண்டு வரப்பட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிேஷக, அலங்கார வழிபாடு நடந்தது.நேற்று முன்தினம், 23ம் தேதி காலை பூ குண்டம் திறக்கப்பட்டது. மாலை, விநாயகர் கோவிலில் இருந்து பக்தர்கள் பூவோடு எடுத்து அம்மனை வழிபட்டனர். இரவு பூ குண்டம் வளர்க்கப்பட்டது. நேற்று காலை, 7:00 மணிக்கு பக்தர்கள் அம்மனை வேண்டி, பூ குண்டம் இறங்கினர். தொடர்ந்து, அம்மனுக்கு பொங்கல் வைத்து, மாவிளக்கு எடுக்கப்பட்டது. நாளை காலை, அம்மன் திருவீதியுலா, மஞ்சள் நீராட்டு; மாலையில் மகா அபிேஷகம் மற்றும் பூஜைகள் நடக்கிறது.