பதிவு செய்த நாள்
25
ஏப்
2019
02:04
பெ.நா.பாளையம் : பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கன்பாளையத்தில் உள்ள தட்ஷிண சீரடி சாய்பாபா கோவிலில் ஏழாம் ஆண்டு மகா உற்சவம் மே, 1ம் தேதி நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.விழாவையொட்டி ஏப்., 30 ம் தேதி கணபதி, சுதர்சன, மகாலட்சுமி ஹோமங்கள் நடக்கின்றன. காலை, 9.00 மணிக்கு நாராயணீயம் பாராயண நிகழ்ச்சி நடக்கிறது.
மே, 1 ம் தேதி காலை, 6.00 மணிக்கு ஆரத்தி, தொடர்ந்து நாமசங்கீர்த்தனம், டில்லி ஸ்ரீதர்ஷீம் ராஜ் கபூர் குழுவினரின் பக்தி இன்னிசை நடக்கிறது. மதியம், 2.30 மணிக்கு நீலகிரி படுகர் வாத்தியத்துடன் நடன நிகழ்ச்சி நடக்கிறது. மாலை, 4.00 மணிக்கு சாய்பாபா நாட்டிய நிகழ்ச்சி நடக்கிறது. விழா நாளில் காலை முதல் மாலை வரை அன்னதானம் நடக்கிறது. விழா நாட்களில் நாயக்கன்பாளையத்தில் இருந்து கோவில் வரை வந்து செல்ல வாகன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விழா ஏற்பாடுகளை சீரடி சாய்பாபா மாதேஸ்வர அறக்கட்டளை அறங்காவலர்கள் செய்து வருகின்றனர்.