மயிலம்: மயிலம் அடுத்த தென்பசியார் லட்சுமி நாராயண பெருமாள் கோவில் திருவிழா நேற்று நடந்தது.தென்பசியார் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் சித்திரை மாத திருவிழா நடைபெற்று வருகிறது. அதனையொட்டி, நேற்று காலை 8:00 மணிக்கு சுவாமிக்கு பால், சந்தனம், பன்னீர், இளநீர், தேன் போன்ற நறுமண பொருட்களினால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மாலை 3:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட உற்சவர் வீதியுலா நடந்தது. விழா ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.