தேவகோட்டை : மாசிமகத்தை முன்னிட்டு குன்றக்குடியிலிருந்து ரத்தினவேல் கொண்டு வரப்பட்டது. நகரத்திலுள்ள மீனாட்சி சுந்தேரேஸ்வரர் கோயிலில் சிறப்பு பூஜைக்கு பின் முக்கிய வீதிகளின் வழியே கொண்டு செல்லப்பட்டது. நகரபள்ளிக்கூடத்தில் சுப்பிரமணியருக்கு சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. ரத்தினவேலை வெளியே எடுத்தால் 18 மூடை அரிசியில் சாதம் வடித்து பக்தர்களுக்கு வழங்கவேண்டும் என்ற ஐதீகப்படி 18 மூடை அரிசியில் சாதம் வடித்து ரத்தினவேல் அணிவிக்கப்பட்ட சுப்பிரமணியருக்கு படையல் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.