Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! உத்தமபாளையத்தில் திருத்தேரோட்டம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தஞ்சை புன்னைநல்லூர் அம்மன் கோவிலில் 1008 பால்குடத்துடன் ஊர்வலம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

08 மார்
2012
12:03

தஞ்சாவூர்: தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் மாசிமக திருநாளையொட்டி, 1008 பால்குடங்களை சுமந்து பெண்கள் ஊர்வலமாக வந்தனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலில் முத்துமாரியம்மன் சுக்ரவார வழிபாட்டு அறக்கட்டளை சார்பில், நேற்று 1008 பால்குட திருவிழா நடந்தது. இதில், பெண்கள் திரளாக கலந்துகொண்டு பால் குடங்களை சுமந்தபடி, கோவிலை சுற்றி ஊர்வலமாக நான்கு ராஜவீதிகள் வழியாக வந்து அம்மன் சன்னதியை அடைந்து, முத்து மாரியம்மனை பயபக்தியுடன் வழிபட்டனர். முன்னதாக, பால்குட திருவிழா துவக்க நிகழ்ச்சிக்கு பூண்டி கிருஷ்ணசாமி வாண்டையார் தலைமை வகித்தார். இந்துசமய அறநிலையத்துறை இணை கமிஷனர் இளங்கோ, அரண்மனை தேவஸ்தானம் உதவி கமிஷனர் ஞானசேகரன், மாரியம்மன் கோவில், ஸ்ரீகைலாசநாதர் கோவில் நித்திய வழிபாட்டுக்குழு தலைவர் சிவகணேச சுப்பிரமணியன், பழனி பாலதண்டாயுதபாணி அடிமை ஜெயராமன் சுவாமிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாசிமக திருநாளை முன்னிட்டு, மதியம் 12 மணிக்கு முத்துமாரியம்மனுக்கு பாலாபிஷேகம், ஆராதனை நடந்தது. 12.30 மணிக்கு கோவில் மூன்றாம் பிரகாரத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பின்னர் மாலையில் ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம், உற்சவ அம்மனுக்கு ஊஞ்சல் சேவையும் நடந்தது. ஏற்பாட்டை முத்துமாரியம்மன் சுக்ரவார வழிபாட்டுக்குழு அறக்கட்டளை துணைத்தலைவர் சிவசுப்பிரமணியன், செயலாளர் வேல்சாமி, பொருளாளர் துரைராஜன், துணைச்செயலாளர் செல்லப்பாண்டியன், துணை பொருளாளர் ராமகிருஷ்ணன் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்:  திருவிசநல்லூர் ஸ்ரீதர அய்யாவாள் மடத்தில் கார்த்திகை அமாவாசை தினமான இன்று(19ம் தேதி) ... மேலும்
 
temple news
கோவை; கார்த்திகை மாதம் அமாவாசை தினத்தை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 
temple news
மதுரை: ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தின் தற்போதைய நிலை குறித்து அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம் புவனாம்பிகை உடனுறை பூலோகநாதர் கோவிலில், அலர்மேலு மங்கை தாயார் சமேத பிரசன்ன ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: கார்த்திகை மாத தேய்பிறை சிவராத்திரியையொட்டி, காஞ்சிபுரம் குபேரபட்டிணத்தில் அமைந்துள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar