Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆலத்தூர் கரிய காளியம்மன் கோவிலில் ... குடந்தை சாரங்கபாணி கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சக்கரபாணி ஸ்வாமி கோவிலில் மாசிமகத்தையொட்டி தேரோட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 மார்
2012
12:03

கும்பகோணம்: மாசிமகப்பெருவிழாவை முன்னிட்டு கும்பகோணம் சக்கரபாணிஸ்வாமி கோவிலின் திருத்தேரோட்டம் நேற்று நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரினை வடம்பிடித்து இழுத்தனர். கும்பகோணம் நகரில் உள்ள ஐந்து முக்கிய வைணவத்திருத்தலங்களுள் ஒன்றாக திகழும், சிறப்புமிக்க வைணவ தலம் சக்கரபாணி சுவாமி கோவில். பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூன்று மூர்த்திகளின் சொரூபமாகவும், சூரியபகவான் சரணாகதி அடைந்த தலம் என்பதால், பாஸ்கரஷேத்திரம் என்றும் அழைக்கப்படுகிறது. சூரிய பகவானால் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு செய்யப்பட்ட இத்தலம் சகல தோஷ நிவர்த்தி தலமாகவும், பரிகார, பிரார்த்தனை தலமாகவும் போற்றப்படுகிறது. சிறப்புமிக்க இவ்வாலயத்தில் கடந்த 28ம் தேதி காலை 7.30மணி முதல் 8.30 மணிக்குள் கொடியேற்றத்துடன் மாசிமகப்பெருவிழா துவங்கியது. நாளை (9ம்தேதி வரை) இவ்விழா நடைபெற உள்ளது. இதற்கிடையில் நடைபெற்ற இவ்விழா நாட்களில் இந்திரவிமானம், சந்திரபிரபை, சேஷவாகனம், ஓலைச்சப்பரத்தில் கருடசேவை, அனுமந்தவாகனம், யானை வாகனம், சூர்ணாபிஷேகம் என, தினம் ஒரு வாகனத்தில் ஸ்வாமி வீதியுலா நடந்தது. நேற்று முன் தினம் (6ம் தேதி) காலை வெண்ணெய்தாழியும், இரவு குதிரை வாகனத்தில் பெருமாள் புறப்பாடும் நடந்தது. நேற்று மாசிமகத்தை முன்னிட்டு அதிகாலை விஜயவல்லி, சுதர்சனவல்லி தாயார் சமேதரராக சிறப்பு அலங்காரத்தில் சக்கரபாணிசுவாமி தேரில் எழுந்தருளினார். காலை 6.45 மணிக்கு தேர் வடம்பிடிக்கப்பட்டு தேரோட்டம் நடந்தது. நான்கு வீதிகளையும் சுற்றிவந்து நிலைக்கு நேற்று காலை 11.45மணிக்கு தேர் வந்தடைந்தது. தொடர்ந்து சக்கரபாணி சுவாமி காவிரி ஆற்றின் சக்கரப்படித்துறையில் தீர்த்தவாரி நடந்தது. ராஜகோபாலசுவாமி கோயிலில் சிறிய ரதத்தில் ஸ்வாமி தாயாருடன் எழுந்தருள ரதப்புறப்பாடு நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்:  திருவிசநல்லூர் ஸ்ரீதர அய்யாவாள் மடத்தில் கார்த்திகை அமாவாசை தினமான இன்று(19ம் தேதி) ... மேலும்
 
temple news
கோவை; கார்த்திகை மாதம் அமாவாசை தினத்தை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 
temple news
மதுரை: ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தின் தற்போதைய நிலை குறித்து அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம் புவனாம்பிகை உடனுறை பூலோகநாதர் கோவிலில், அலர்மேலு மங்கை தாயார் சமேத பிரசன்ன ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: கார்த்திகை மாத தேய்பிறை சிவராத்திரியையொட்டி, காஞ்சிபுரம் குபேரபட்டிணத்தில் அமைந்துள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar