பதிவு செய்த நாள்
08
மார்
2012
12:03
மாமல்லபுரம் :கடம்பாடி மாரி சின்னம்மன் கோவிலில், நாளை தெப்போற்சவம் நடைபெற உள்ளது. மாமல்லபுரம் அடுத்த கடம்பாடி கிராமத்தில், மாரி சின்னம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்குள்ள அம்மனை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர் மற்றும் சென்னை பகுதியை சேர்ந்தவர்கள், குல தெய்வமாக வழிபடுகின்றனர். இக்கோவிலில், இந்தாண்டு தெப்போற்சவம், நாளை நடைபெற உள்ளது. நாளை பகல் 12 மணியிலிருந்து, மாலை 3 மணி வரை, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். மாலை 4 மணியிலிருந்து 6 மணி வரை, சிறப்பு அலங்காரம் மற்றும் வழிபாடு நடைபெறும். இரவு 9 மணிக்கு அம்மன் தெப்பத்தில் எழுந்தருளி வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறும். மறுநாள் அதிகாலை 3 மணிக்கு, அம்மன் வீதியுலா நடைபெறும்.