பதிவு செய்த நாள்
08
மார்
2012
12:03
செஞ்சி :செஞ்சியில் நடந்த மாசி மக தீர்த்தவாரியில் பக்தர்களுக்கு அன்னதானம்நடந்தது. செஞ்சி சங்கராபரணி ஆற்றங்கரையில் உள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள், கோதண்டராமர் கோவிலில் நேற்று மாசி மக தீர்த்த வாரி நடந்தது. இதில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அகில பாரத அய்யப்பா சேவா சங்கம் சார்பில் அன்னதானம் நடந்தது. மாவட்ட இணை செயலாளர் காமராஜ் தலைமை தாங்கினார். நகர தலைவர் சேகர், லோக ஜெயராமன், டாக்டர் ரமேஷ்பாபு முன்னிலை வகித்தனர். செயலாளர் செந்தில்குமார் வரவேற்றார். தொழிலதிபர் கோபிநாத் அன்னதானத்தை துவக்கி வைத்தார். பொருளாளர் பத்மநாபன் நன்றி கூறினார். இதில் குமார் அய்யர், நவநீதன், ரங்கநாதன், சீனுவாசன் அனுக்குமார் கலந்து கொண்டனர். இதே போல் ஜோதிடர் கிரி, சிவசங்கரன், மயிலம் தொகுதி இளைஞர் காங்., தலைவர் மகேஷ்குமார், சிங்கவரம் அன்னதானக்குழு ஏழுமலை, சுரேஷ்குமார், கோபால் ஆகியோர் பக்தர்களுக்கு மோர் தானம் வழங்கினர்.