பதிவு செய்த நாள்
08
மார்
2012
12:03
அரூர்: அரூர் அடுத்த தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக தேரோட்டம் வரும் 13ம் தேதி நடக்கிறது. பூ உலகில் அவதாரம் செய்த ராமபிரான் ராவணனை சம்ஹாரம் செய்து திரும்புகையில் முதல் கால பூஜையை ராமேஸ்வரத்தில் முடித்து விட்டு இரண்டாம் கால பூஜைக்காக தீர்த்கிரிமலை மீது அம்பு எய்து தீர்த்தம் உண்டாக்கி அந்த தீர்த்தத்தை கொண்டு பூஜையை முடித்தார். அந்த தீர்த்தமே ராமர் தீர்த்தம் என்கிற புண்ணிய தீர்த்தமாகும். இந்த மலையும் தீர்த்தகிரி மலை என அழைக்கப்படுகிறது. ராமர் வழிபாட்ட சிறப்பு மிக்க தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவிலில் மாசிமக தேரோட்ட விழா ஆண்டுதோறும் விமர்சையாக கொண்டாடப்படும். இந்தாண்டு விழா நேற்று விநாயகர் பூஜையுடன் துவங்கியது. நேற்று (மார்ச் 7) கொடியேற்றம் நடந்தது. 8ம் தேதி ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், மயில் வாகனத்தில் வீதி உலாவும், 9ம் தேதி ஸ்வாமி வீதி உலாவும், 10ம் தேதி ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜையும் நடக்கிறது. வரும் 11ம் தேதி ஸ்வாமி திருக்கல்யாணமும், 12ம் தேதி ரிஷப வாகனத்தில் வீதிஉலாவும், விழாவின் முக்கியமான 13ம் தேதி மாசிமக தேரோட்டம் நடக்கிறது. 14ம் தேதி விமான உற்சவ வீதிஉலாவும, 15ம் தேதி கொடியிறக்கம், தீர்த்தவாரி உற்சவமும், 16ம் தேதி சத்தாப்பரணம், சயனோற்சவமும் நடக்கிறது. ஏற்பாடுகளை செயல் அலுவலர் (பொறுப்பு) திருஞானசம்பந்தர், தக்கா, உதவி ஆணையர் ரமேஷ், கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.விலில் வரும் 13ல் மாசிமக தேரோட்டம்.