Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பிரத்தியங்கிரா தேவி கோவிலில் ... மடைகருப்பசாமி கோவிலில் 320 ஆண்களுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புதுக்கோட்டை லட்சுமி நரசிம்ம ஜெயந்தி நுாற்றாண்டு விழா: 17ம் தேதி துவக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 மே
2019
04:05

 சென்னை:புதுக்கோட்டையில் அமைந்துள்ள, லட்சுமி நரசிம்ம சுவாமியின், நுாற்றாண்டு விழா, வரும், 17ம் தேதி முதல், 10 நாட்கள் நடைபெற உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை நகரின் கீழ் மூன்றாவது வீதியில், கோபாலகிருஷ்ண பாகவத சுவாமி நாம சங்கீர்த்தன மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தில் உள்ள, கோபாலகிருஷண் பாகவத சுவாமி திவ்ய சன்னதியில், லட்சுமி நரசிம்ம சுவாமியின் நுாற்றாண்டு விழா, வரும், 17 முதல், 26ம் தேதி வரை, 10 நாட்கள் கொண்டாடப்பட உள்ளது.
இந்த விழாவை, புதுக்கோட்டை லட்சுமி நரசிம்ம ஜெயந்தி அறக்கட்டளை நடத்துகிறது. தினமும், இந்தியா மட்டுமின்றி, உலகம் முழுவதும் உள்ள பாகவதர்கள் பங்கேற்கும், சிறப்பு பஜனைகள் நடைபெறும். அனைத்து விதமான ஹோமங்களும் நடத்தப்படும். வேத மந்திரங்களும் ஓதப்படும்.நுாற்றாண்டு விழா துவக்க நாளான, வரும், 17 முதல் சம்பூர்ண நாராயணீயத்தின் பாராயண நிகழ்ச்சி நடைபெறும். அதன் நிறைவு நாளான, 23ம் தேதி, சுவாமியின் திருக்கல்யாண நிகழ்வான, வசந்தோற்சவம் நடைபெறும்.

24ல் ஆஞ்சநேயருக்கு, 1,008 வடை மாலையுடன், விசேஷ பூஜைகள் செய்து வழிபடும், பக்தோற்சவம் நிகழ்ச்சி நடைபெறும்.அடுத்த நாளான, 25ம் தேதி, நாள் முழுவதும், ராமனின் திருப்பெயரை உச்சரிக்கும், அகண்ட ராமநாம ஜபம் நடைபெறும். நிறைவு நாளான, 26ம் தேதி, இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று, பஜனைகளை பாடி சிறப்பித்த, 108 பாகவதர்களுக்கு, பாதபூஜை செய்து மரியாதை செலுத்தும், பாகவத ஆராதனை நிகழ்ச்சி நடைபெறும். இவற்றுடன், நித்யபடி பூஜை, அபிஷேகம், உஞ்சவிருத்தி, நான்கு வேத ஸம்ஹிதா பாராயணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெறும். மேலும் விபரங்களுக்கு, 96639 33599, 94865 42444 என்ற, மொபைல் போன் எண்களில், அறக்கட்டளை நிர்வாகிகளிடம் பேசி தெரிந்து கொள்ளலாம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிவில் தினம் காலையில் யாகசாலை பூஜை ... மேலும்
 
temple news
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் இன்று ஐப்பசி வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
திருப்பூர்: சிவன்மலை சுப்ரமணிய‌சுவாமி கோவிலில் நேற்று முன்தினம் கந்த சஷ்டி விரதம் துவங்கியது. ஏராளமான ... மேலும்
 
temple news
கோவை; கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் அருள் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் ஐப்பசி மாதம் முதல் வெள்ளி ... மேலும்
 
temple news
திருப்பூர்; விஸ்வேஸ்வரர் கோவில் கந்த சஷ்டி  சூரசம்ஹாரம் விழாவிற்கு புதிதாக செய்யப்பட்டுள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar