Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

புதுக்கோட்டை லட்சுமி நரசிம்ம ... மழை வேண்டி வருண யாகம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மடைகருப்பசாமி கோவிலில் 320 ஆண்களுக்கு கறி விருந்து
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 மே
2019
04:05

சிவகங்கை:சிவகங்கை அருகே, திருமலையில், மடைகருப்பசாமி கோவில் சித்திரை விழாவை முன்னிட்டு, 320 ஆடுகள் பலியிட்டு, ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கறி விருந்து நடந்தது. திருமண தடை, மழை பெய்து விவசாயம் செழிக்க போன்ற வேண்டுதலுக்காக, பழமையான இக்கோவிலில் சித்திரை திருவிழா நடக்கும். ஏப்., 26ல் காப்பு கட்டுடன் விழா துவங்கியது. அன்று முதல், ஆண்கள் மட்டும் விரதம் துவக்கினர். காப்பு கட்டியதும் கோவில் வளாகத்தில் உள்ள கண்மாய் மடைகள் அடைக்கப்பட்டன.

எட்டாம் திருநாளான, நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு திருமலை கிராமத்தில் இருந்து ஏராளமான ஆண்கள் நேர்த்திக் கடனுக்காக அரிவாள், மணி, கோவில் காளைகள், கறுப்பு நிறமுள்ள, 320 வெள்ளாடுகளுடன் ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர். மலைக்கொழுந்தீஸ் வரர் கோவிலில் தீர்த்தம் எடுத்து, மண்பானையில் கருப்பருக்கு பொங்கல் வைத்து  வழிபட்டனர். நேர்த்திக்கடனாக வந்த, 320 ஆடுகளை கருப்பருக்கு பலியிட்டனர். நேற்று முன்தினம் இரவு, 1:30 மணிக்கு கருப்பருக்கு பலியிட்ட ஆடுகள், பச்சரிசி சோற்றை ஏற்க வேண்டி, கவுளி சத்தம் கேட்டனர். கருப்பரிடம் உத்தரவு பெற்றதும், 6,000 பக்தர்களுக்கு பச்சரிசி சோற்றை உருட்டி கறிக்குழம்புடன் பிரசாதம் வழங்கினர்.இங்கு சமைத்த உணவை, சாப்பிட்டு காலி செய்த பிறகே, பக்தர்கள் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்பது நம்பிக்கை. இதனால், இரவு, 3:00 மணி வரை, பக்தர்களுக்கு கறி விருந்து பரிமாறப்பட்டது.பின், 320 ஆடுகளின் தோலை எரித்து, வீட்டிற்கு சென்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோத்தகிரி: -கோத்தகிரி அருகே அமைந்துள்ள ஒன்னதலை ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழா, நேற்று சிறப்பாக ... மேலும்
 
temple news
கோத்தகிரி: கோத்தகிரி அருகே அமைந்துள்ள திம்பட்டி எட்டூர் உச்சகாளியம்மன் கோவிலில், மகா கு ம்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் அங்காளம்மன் கோவில் தேர் திருவிழா நடந்தது.ஸ்ரீமுஷ்ணம் சந்தை தோப்பு அருகே உள்ள ... மேலும்
 
temple news
கடலுார்: திருவந்திபுரம் கிடாம்பி ஆச்சான் கோவிலில் சீனுவாச பெருமாளுக்கு திருக்கல்யாணம் ... மேலும்
 
temple news
கடலுார்: பாடலீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பந்தக்கால் முகூர்த்தம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar