பண்ருட்டி: பண்ருட்டி திரவுபதியம்மன் கோவிலில், பிரம்மோற்சவ நிறைமணி உற்சவத்தில், மூலவர் திரவுபதியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
பண்ருட்டி திரவுபதியம்மன் கோவிலில் கடந்த ஏப்ரல் 9ம் தேதி கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் துவங்கியது. கடந்த 26 ம் தேதி தீமிதி திருவிழாவும், 27ம் தேதி மஞ்சள் நீர் உற்சவமும் நடந்தது.நேற்று முன்தினம் கோவில் சிப்பந்திகளால் நிறைமணி உற்சவம் நடந்தது. விழாவையொட்டி காலை 10:00 மணிக்கு மூலவர் திரவுபதியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்து. பகல் 12:00 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு மூலவர் திரவுபதியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 7:00 மணிக்கு சிறப்பு நாதஸ்வர கச்சேரி நடந்தது.விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.