Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பந்தலூர் மாரியம்மன் கோவில் திருவிழா ... சோழவந்தான் அருகே ராயபுரம் சர்ச் தேர் திருவிழா சோழவந்தான் அருகே ராயபுரம் சர்ச் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சிபுரம் வைகாசி பிரம்மோற்சவ விழா: அனந்தசரஸ் குளம் தூய்மைப்படுத்த ஏற்பாடு
எழுத்தின் அளவு:
காஞ்சிபுரம் வைகாசி பிரம்மோற்சவ விழா: அனந்தசரஸ் குளம் தூய்மைப்படுத்த ஏற்பாடு

பதிவு செய்த நாள்

06 மே
2019
02:05

காஞ்சிபுரம்:வரதராஜ பெருமாள் கோவில் குளத்தில் இருந்து, அத்தி வரதர் வெளியில் எடுக்கும் வைபவம், ஜூலை, 1ல் நடைபெறுகிறது. இதற்காக, பிரம்மோற்சவ தீர்த்தவாரி முடிந்த பின், குளத்தை சுத்தம் செய்யும் பணி நடைபெற உள்ளது.காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில், அனந்தசரஸ் குளத்தில் உள்ள அத்தி வரதரை, 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியில் எடுப்பர். இந்த வைபவம், 48 நாட்கள் விமரிசையாக நடைபெறும்.

இந்த ஆண்டு, ஜூலை, 1ம் தேதி, குளத்தில் இருந்து வெளியே எடுக்கப்படும் அத்தி வரதர், வசந்த மண்டபத்தில் வைக்கப்படுகிறார்.வரதர், 24 நாட்கள் சயன நிலையிலும், 24 நாட்கள் நின்ற கோலத்திலும் அருள்பாலிப்பார். இதற்கான ஏற்பாடுகளில், கோவில் நிர்வாகத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி பிரம்மோற்சவம் வரும், 17ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்குகிறது. வரும், 25ல், கோவில் குளத்தில், தீர்த்தவாரி உற்சவம் நடைபெறும்.பிரம்மோற்சவம் முடிந்த பின், குளத்தில் உள்ள தண்ணீரை வெளியில் எடுத்து, கோவில் வளாகத்தில் உள்ள பொற்றாமரை குளத்தில் விடப்படுகிறது.இது குறித்து, கோவில் ஊழியர்கள் கூறியதாவது:அனந்தசரஸ் குளத்தில், தண்ணீர் மற்றும் சகதியின் அளவு குறித்து, தனியார் அமைப்பு மூலம், கடந்த வாரம் ஆய்வு செய்யப்பட்டது.

இதில், 8 அடி தண்ணீர், 1.5 அடி ஆழத்தில் சகதி இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.பிரம்மோற்சவம் முடிந்ததும், சகதி மற்றும் தண்ணீரை அகற்றி, அத்தி வரதர் வைபவ ஏற்பாடுகளை மேற்கொள்ள இருக்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் (மே., 4ல்), ஹிந்து அறநிலையத் துறை ஆணையர், பனீந்தர் ரெட்டி, வரதராஜ பெருமாள் கோவிலை பார்வையிட்டு, ஆலோசனை கூட்டம் நடத்தினார்.இதில் பங்கேற்ற அதிகாரிகளிடம், அத்தி வரதர் வைபவ விழாவுக்கு, அந்தந்த துறை அதிகாரிகள், அதற்கான வேலைகளை செய்து முடிக்க வேண்டும் என, அறிவுறுத்தி சென்றார்.

நான்கு இடங்களில் கார் பார்க்கிங்தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து, அத்தி வரதரை தரிசிக்க, லட்சக்கணக்கானோர் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

பக்தர்கள் வரும் கார்கள், நகர்ப்புறத்திற்கு வெளியில் நிறுத்த, ஏற்பாடு செய்யப்பட உள்ளது. ஓரிக்கை, சர்வதீர்த்த குளம் எதிரில், பொன்னேரிகரை, டோல்கேட் ஆகிய நான்கு இடங்களில், கார்களுக்கு மட்டும், பார்க்கிங் வசதி செய்யப்பட உள்ளது. அங்கிருந்து கோவிலுக்கு, மினி பஸ் இயக்க, மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. பக்தர்களுக்கு, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியும் செய்யப்பட உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா அக். 22ல் காப்பு ... மேலும்
 
temple news
கும்மிடிப்பூண்டி; கும்மிடிப்பூண்டி பிரசன்ன வெங்கடேச பெருமாள், கருட வாகனத்தில் வீதியுலா சென்று ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே இடைக்காட்டூரில் உள்ள சித்தர் இடைக்காடர் கோயிலில் நடைபெற்ற ஜெயந்தி ... மேலும்
 
temple news
திருப்பதி; ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்குப் பிறகு வரும் சதுர்த்தி தினம் நகுல சதுர்த்தியாக ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் கூவானை ஐயனார் கோயில் புரவி எடுப்பு திருவிழா நடந்தது.மதுரை மாவட்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar