பதிவு செய்த நாள்
07
மே
2019
01:05
நாமக்கல்: சித்திரை மாத கிருத்திகையை முன்னிட்டு, முருகன் கோவில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.
நாமக்கல் - மோகனூர் சாலை, பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில், நேற்று காலை, 8:00 மணிக்கு கணபதி பூஜையுடன் நிகழ்ச்சிகள் துவங்கின. மூலவர் பாலதண்டாயுதபாணிக்கு பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட நறுமண பொருட்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து முத்தங்கி சாத்தப்பட்டு செவ்வரளி, மனோரஞ்சிதம், மல்லிகை உள்ளிட்ட மலர்களால் மாலை அணிவிக்கப்பட்டு, ராஜா அலங்காரத்தில் பாலதண்டாயுதபாணி பக்தர்களுக்கு அருள் பாலிதார். மஹா தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. முன்னதாக சிறப்பு யாகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.