Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அபிராமம் மழை வேண்டி 16 அடி அலகு குத்தி ... சென்னையில் பக்தர்களுக்கு பலன் தந்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாசாணியம்மன் கோவிலில் பாதுகாப்பு: பலப்படுத்த அதிகாரிகள் ஆலோசனை
எழுத்தின் அளவு:
மாசாணியம்மன் கோவிலில் பாதுகாப்பு: பலப்படுத்த அதிகாரிகள் ஆலோசனை

பதிவு செய்த நாள்

07 மே
2019
02:05

ஆனைமலை:ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத் துவதற்காக, பல்வேறு துறை அதிகாரிகளுக்கு கூட்டம் நடத்தப்பட்டு, கோவிலில் ஆய்வு செய்யப்பட்டது.இலங்கையில் தேவாலயங்கள், ஓட்டல்களில் பயங்கரவாதிகள் நிகழ்த்திய தொடர் குண்டுவெடிப்பில், நூற்றுக்கணக்கானோர் பலியாகினர்.

இதையடுத்து, நாடு முழுவதும் வழிபாட்டு தலங்கள், ரயில்வே ஸ்டேஷன், பெரிய ஓட்டல்கள், முக்கிய இடங்களில், போலீசார் சோதனை செய்து, பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தி வருகின்றனர்.இந்நிலையில், கோவில்களில் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்யவும், கட்டமைப்புகளை மேம்படுத்தவும், இந்து சமய அறநிலையத்துறை மற்றும் காவல்துறை உத்தரவிட்டு உள்ளது. ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், சென்னை உளவுத்துறை பாதுகாப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையில் நேற்று கூட்டம் நடந்தது. இதில், வால்பாறை டி.எஸ்.பி., விவேகானந்தன், ஆனைமலை இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன், எஸ்.ஐ., கருப்பசாமி பாண்டியன், கோவில் உதவி ஆணையாளர் ஆனந்த் மற்றும் வருவாய்த்துறை, பேரூராட்சி, உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பங்கேற்றனர்.

ஆய்வுக்கூட்டம் முடிந்ததும், கோவில் வளாகத்தில் பாதுகாப்பு வசதிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.வால்பாறை டி.எஸ்.பி., விவேகானந்தன் பேசுகையில், கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு வழங்க போலீசார், தீயணைப்புத்துறை, கோவில் நிர்வாகம் இணைந்து செயல்பட வேண்டும்.விசேஷ தினங்களில் மக்களுக்கு ஆபத்து காலத்தில் முதலுதவி வழங்கி, சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். தீயணைப்பு கருவிகள் முறையாக பராமரிக்க வேண்டும், என்றார்.

உளவுத்துறை பாதுகாப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் சேகர் கூறியதாவது:கூட்டம் அதிகம் இருக்கும் பெரிய கோவில்களிலும், விசேஷ தினங்களில் மட்டுமே கூட்டம் வரும் கோவில்களிலும் தற்போது பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

மாசாணியம்மன் கோவிலுக்கு, ஏழு நுழைவு வாயில்கள் உள்ளன.ஆபத்து காலத்தில் மக்கள் வெளியேற, குறிப்பிட்ட நுழைவு வாயில்களை தேர்வு செய்து அவற்றில் அவசர கால வழி என்பதை தெரிவிக்கும் வகையில், அறிவிப்பு பலகைகள் வைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. பணியாளர்கள் கட்டாயம் அடையாள அட்டை அணிந்திருக்க வேண்டும்.

கோவில் நுழைவுவாயிலில், விமான நிலையத்தில் இருப்பது போல டி.எப்.எம்.டி., என்ற, மெட்டல் டிடெக்டர் அமைக்கவும், பக்தர்கள் கோவிலுக்குள் கொண்டு வரும் பொருட்களை சோதனையிட ஸ்கேனர் அமைக்க பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.இவ்வாறு, தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஸ்ரீரங்கம்; ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் பூபதித்திருநாள் ( தை தேர்) இன்று ... மேலும்
 
temple news
திருவள்ளூர்: தை மாத பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு திருவள்ளூர் ஸ்ரீ வைத்திய வீரராகவப் பெருமாள் கோவில் ... மேலும்
 
temple news
பந்தலூர்; பந்தலூர் அருகே எருமாடு ஸ்ரீ துர்கா பகவதி ஆலய திருவிழாவில் தெய்யம் துள்ளல் , பக்தர்களைக் ... மேலும்
 
temple news
பழநி; பழநி தைப்பூசத்திற்கு முருகன் மலைக்கோயில் செல்ல பக்தர்களின் வசதிக்கேற்ப பாதை மாற்றம் ... மேலும்
 
temple news
குன்றத்துார்: குன்றத்துாரில், சேக்கிழார் கோவில் மஹா கும்பாபிஷேகம், பிப்., 11ல் நடக்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar