Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் மழைக்காக ... நயினார்கோவிலில் மழை வேண்டி வருண யாகம் நயினார்கோவிலில் மழை வேண்டி வருண ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் பக்தர்கள் தவிப்பு: அடிப்படை வசதிகள் இல்லை
எழுத்தின் அளவு:
ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் பக்தர்கள் தவிப்பு: அடிப்படை வசதிகள் இல்லை

பதிவு செய்த நாள்

08 மே
2019
12:05

ராமநாதபுரம்: திருப்புல்லாணி அருகே ஆதிஜெகநாத பெருமாள் கோயிலில் அடிப்படை வசதிகள் எதுவுமே இல்லாததால் பக்தர்கள் தவிக்கின்றனர். திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயில் வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாகும். ராமநாதபுரம் சமஸ்தானம் சார்பில் கோயில் நிர்வகிக்கப்படுகிறது. இங்கு ஆதி ஜெகநாத பெருமாள், தர்பசயன ராமர் சன்னதிகள் உள்ளது. இங்கு வெளி மாவட்டங்களில் இருந்தும், வட மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர்.

சேதுக்கரை சேது பந்தன ஆஞ்சநேயர் கோயிலில் தர்ப்பணம் செய்ய அதிகமான பக்தர்கள் வருகின்றனர். இங்கு கடலில் புனித நீராடிவிட்டு, திரும்பு வழியில் உள்ள ஆதிஜெகநாத பெருமாள் கோயில் பகுதியில் அமர்ந்து உணவு உண்டு திரும்புவது வழக்கம்.ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் பக்தர்கள் உணவு அருந்துவதற்கு என தனியாக ஷெட் ஏதும் அமைத்து தரப்படவில்லை. பக்தர்கள் நடு ரோட்டில் அமர்ந்து உணவருந்துகின்றனர். உணவருந்தும் இடத்தில் கழிப்பறை உள்ளது. பக்தர்களுக்கு சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. ஆடு, மாடுகள் பக்தர்களை உணவு அருந்த விடாமல் தொல்லை தருகின்றன.

இங்கு பக்தர்களுக்கு குடிநீர் வசதியும் இல்லை. கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு பிளான்ட் செயல்பாடின்றி முடங்கியுள்ளது.பக்தர்கள் குடிநீருக்காக கடைகளுக்கு அலையும் பரிதாபம் உள்ளது. காசு கொடுத்து பாட்டில் தண்ணீர் வாங்கி அருந்தும் நிலை உள்ளது. மழை, வெயில் நேரங்களில் ரோடுகளில் அமர்ந்து உணவருந்த முடியாமல் பக்தர்கள் தவிக்கின்றனர். பக்தர்கள் காலணிகளை வெளியே பாதுகாப்பற்ற நிலையில் விட்டு செல்லும் நிலை உள்ளது. காலணி பாதுகாப்பு கூடம் ஏதும் அமைக்கப்படவில்லை.

பக்தர்கள் இரவு நேரங்களில் வரும் போது போதுமான விளக்கு வசதி இல்லை.இருளில் அச்சத்துடன் பக்தர்கள் வரும் நிலை உள்ளது. கோடை விடுமுறை என்பதால், கோயிலுக்கு வரும் பக்தர்கள், சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந் நிலையில் கோயிலில் பக்தர்களுக்கு எந்த அடிப்படை வசதியும் செய்து தரப்படாததால்,பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். கோயில் நிர்வாகம் மக்களுக்கு குடி நீர் வழங்கவும். உணவு அருந்துவதற்கான ஷெட்டும் அமைத்து தர வேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சானூர்; திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் சிறப்பாக நடைபெற்று வந்த பிரம்மோற்சவம் கொடி ... மேலும்
 
temple news
நல்லவை யாவும் நடக்கும் சிறந்த நாள் இன்று. பெருமாளை வழிபடுவதற்கு சிறந்த நாள் திருவோணம். பெருமாளின் ... மேலும்
 
temple news
அயோத்தி: உத்தர பிரதேசத்தில், பிரமாண்ட ராமர் கோவிலில் காவி கொடி ஏற்றிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா ... மேலும்
 
temple news
சென்னை: ‘‘பாரதம் 5,000 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு உடையது. நாடு முழுதும், கலியுக தேதியிட்ட, 905 கல்வெட்டுகள் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் நாளை கும்பாபிஷேகம் நடக்கிறது.ரிஷிவந்தியத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar