ரயில்வே விபத்தை தவிர்க்க விநாயகருக்கு சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10மார் 2012 10:03
விழுப்புரம் :ரயில்வே துறையில் ஏற்படும் தொடர் விபத்துகளைத் தவிர்க்க, விழுப்புரம் விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.திருச்சி மண்டல ரயில்வே பகுதிகளில் கடந்த ஒரு மாதத்தில் 10க்கும் மேற்பட்ட விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இதனால் போக்குவரத்து பாதிப்பு மற்றும் ரயில்வே நிர்வாகத்திற்கு பெரும் நஷ்டமும் ஏற்பட்டுள்ளது. இதற்கு பரிகாரம் செய்யும் வகையில் விழுப்புரம் ரயிலடி செல்வ விநாயகர் கோவிலில் நேற்று மாலை 5 மணிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.