பதிவு செய்த நாள்
10
மார்
2012
10:03
ஸ்ரீவில்லிபுத்தூர்:ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன்கோயில் பூக்குழி விழா ,நாளை (மார்ச் 11) கொடியேற்றத்துடன் துவங்கி பத்து நாட்கள் நடக்கிறது.இதையொட்டி காப்பு கட்டுதலுடன், கொடிப்பட்டமானது மாரியம்மன் கோயில் தெரு, சாலியர் சமூக பொது சாவடியிலிருந்து புறப்பட்டு, கோயிலை வந்தடைகிறது. காலை 7.45 மணிக்கு கொடியேற்றமும் நடக்கிறது. இரவு அம்மாள் சிங்க வாகனத்தில் புறப்பாடு நடக்கிறது. தொடர்ந்து விழா நாட்களில் அம்மாள் காமதேனு, சிங்கம்,அன்னம், ரிஷபம்,நாகம், குதிரை தண்டியல் வாகனங்களில் வீதியுலா நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 17ம் தேதி இரவு பூ பல்லக்கில் வீதியுலா நடக்கிறது. 22ம் தேதி அதிகாலை 5 மணிக்கு தீ வளர்த்தல், தீ போடுதல் நடக்கிறது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடக்கின்றன. பிற்பகல் 2 மணிக்கு தீ மிதித்தல் நடக்கிறது. 23ம் தேதி காலையில் தேரோட்டம், மாலையில் மஞ்சள் நீராட்டு, யானையில் வீதியுலா நடக்கிறது.