Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! திருமலையில் குவியும் பக்தர்கள் கூட்டம்! திருமலையில் குவியும் பக்தர்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் கோலாகலம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

12 மார்
2012
10:03

திருச்சி: பக்தர்கள் நன்மைக்காக, பச்சைப் பட்டினி விரதம் இருக்கும் சமயபுரம் மாரியம்மனுக்கு, பூக்களால் பக்தர்கள் அபிஷேகம் செய்யும் பூச்சொரிதல் விழா, நேற்று கோலாகலமாகத் துவங்கியது. உலக பிரசித்தி பெற்ற சக்தி ஸ்தலங்களில், திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் முதன்மையானது. ஆண்டுதோறும், மாசி மாதம் கடைசி வார ஞாயிற்றுக் கிழமையில், அம்மனுக்கு பூச்சொரிதல் விழாவும், சித்திரை மாத முதல் வார செவ்வாய்க் கிழமையில், சித்திரைத் தேரோட்டமும் வெகு சிறப்பாக நடக்கும். இந்தாண்டு பூச்சொரிதல் விழா, நேற்று கோலாகலமாக துவங்கியது. கோவில் இணை கமிஷனர் செல்வராஜ், உள்ளூர் பிரமுகர்கள் உள்ளிட்டோர், பூத்தட்டுகள், பூக்கூடைகள் ஏந்தி, தேரோடும் வீதிகளில், மேள தாளத்துடன், யானைகளுடன் ஊர்வலமாக சன்னதியை சென்றடைந்தனர். தொடர்ந்து, பூச்சொரிதல் விழா நடந்தது. உலக நன்மைக்காக, மாசி மாத கடைசி ஞாயிற்றுக் கிழமையில் இருந்து, பங்குனி மாதம் கடைசி ஞாயிற்றுக் கிழமை வரை, தொடர்ந்து, 28 நாட்களுக்கு, மாரியம்மன் பச்சைப் பட்டினி விரதம் மேற்கொள்வதாக ஐதீகம். மேலும், மாரியம்மன் விரதத்தின் போது, வழக்கமாக செய்யப்படும் நைவேத்யத்துக்கு பதிலாக, துள்ளுமாவு, இளநீர், நீர்மோர், பானகம், கரும்பு போன்றவை, நைவேத்யமாக படைக்கப்படுகின்றன. மக்களுக்காக மாரியம்மன் மேற்கொள்ளும் விரதத்தை போற்றும் விதத்தில், அம்மன் மீது பூத்தூவி வழிபடும் வழக்கமே, காலப்போக்கில் பூச்சொரிதல் விழாவாக மாறியது. திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, பக்தர்கள் விடிய விடிய பூக்களை கொண்டு வந்து, மாரியம்மனுக்கு பூக்களால் அபிஷேகம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மேட்டுப்பாளையம்; காரமடை ரங்கநாதர் கோவிலில், புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமை விழா இன்று ... மேலும்
 
temple news
உடுமலை ; புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு உடுமலை திருப்பதி வேங்கடேச பெருமாள் கோவிலில் சிறப்பு ... மேலும்
 
temple news
ஒரே நாளில் புரட்டாசி சனி, ஏகாதசி வருவது பெருமாள் வழிபாட்டிற்கு சிறப்பானதாகும். ஏழுமலையானுக்கு ... மேலும்
 
temple news
பெரம்பூர்; பெரம்பூர் அன்னதான சமாஜம் சார்பில் 221 கிலோ லட்டு பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி; கோவை மாவட்டம், பொள்ளாச்சி, ஆனைமலையில், ஆழியாறு ஆற்றுக்கு நன்றி தெரிவிக்கும், ஆரத்தி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar