பதிவு செய்த நாள்
12
மார்
2012
11:03
மாமல்லபுரம்: கடம்பாடி மாரி சின்னம்மன் கோவில் தெப்ப உற்சவ விழா, நேற்று முன்தினம் கோலாகலமாக நடந்தது.மாமல்லபுரம் அடுத்த, கடம்பாடி கிராமத்தில், மாரி சின்னம்மன் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில், மாசி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை, தெப்போற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெறும். வழக்கம்போல் இந்தாண்டு தெப்போற்சவம், நேற்று முன்தினம் இரவு கோலாகலமாக நடந்தது.விழாவையொட்டி அம்மனுக்கு பகலில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பக்தர்கள் பொங்கல் படைத்து, அம்மனை வழிபட்டனர். மாலை அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் வழிபாடு நடந்தது. இரவு 11.30 மணிக்கு, விநாயகர், பெரியம்மன், மாரி சின்னம்மன், ஆகியோர் மேளதாளங்கள் ஒலிக்க, அதிர்வேட்டுகள் முழங்க, தெப்பக்குளத்திற்கு சென்றனர். பக்தர்கள் கற்பூரம் ஏற்றி, தேங்காய் உடைத்து, அம்மனை வழிபட்டனர்.நேற்று காலை 5.30 மணிக்கு அம்மன் வீதியுலா நடந்தது.திருக்கழுக்குன்றம் அடுத்த, எடையூர் கிராமத்தில் உள்ள, மாரியம்மன் கோவிலிலும், இரவு 10 மணிக்கு, தெப்போற்சவம் நடந்தது.