காரைக்குடி :காரைக்குடி முத்துமாரியம்மன் கோயில் மாசி-பங்குனி திருவிழா மார்ச் 13 அன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அன்று காலை 4.15 மணிக்கு கணபதி ஹோமத்துடன் பூஜைகள் துவங்கி, 5.45 மணிக்கு கொடியேற்றம், அம்மனுக்கு காப்புகட்டி விழா துவங்கும். தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கும். மார்ச் 20 அன்று கரகம், மது, முளைப்பாரி எடுத்தல், மார்ச் 21 அன்று காவடி, பூக்குழி இறங்குதல் , பால்குட உற்சவம் நடைபெறும். மார்ச் 22ல் இரவு 9 மணிக்கு அம்மன் திருவீதி உலா, 23 அன்று மாலை 4 மணிக்கு சந்தனகாப்பு அலங்காரம் நடைபெறும். பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேர்த்தி செலுத்துவர். விழா ஏற்பாட்டை கோயில் தக்கார் ராமசந்திரன், நிர்வாக அலுவலர் முத்துராமன் செய்து வருகின்றனர்.