பதிவு செய்த நாள்
12
மார்
2012
11:03
தென்காசி : தென்காசி பகுதி கோயில்களில் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு நடந்தது.தென்காசி உலகம்மன் உடனுறை காசிவிசுவநாதர் கோயிலில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகருக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தெற்குமாசி வீதி கற்பக விநாயகர் கோயிலில் கணபதி ஹோமத்துடன் சிறப்பு வழிபாடு துவங்கியது. மாலையில் நறுமணப் பொருட்களால் மகாபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. தென்காசி அணைக்கரை தெரு விநாயகர் கோயில், புலிக்குட்டி விநாயகர் கோயில், முடுக்கு விநாயகர் கோயில், செண்பக விநாயகர் கோயில், ரயில்வே ரோடு தர்ம விநாயகர் கோயில், கூலக்கடை பஜார் சந்தி விநாயகர் கோயில், வேன் ஸ்டாண்ட் விநாயகர் கோயில் உள்ளிட்ட அனைத்து விநாயகர் கோயில்களிலும் சங்கடஹர சதுர்த்தி சிறப்பு வழிபாடு நடந்தது. மேலகரம் அக்ரஹாரம் மகாகணபதி கோயிலில் மாலையில் வாசனை திரவியங்களால் விநாயகருக்கு மகாபிஷேகம் செய்யப்பட்டது. சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. குற்றாலம் குற்றாலநாதர் கோயில் விநாயகர் சன்னதி, இலஞ்சி குமாரர் கோயில் விநாயகர் சன்னதி, குன்னக்குடி விநாயகர் கோயில், குத்துக்கல்வலசை பசிதுஷ்டராய கண்ட விநாயகர் கோயில், அண்ணாநகர் சுபிட்ச வழித்துணை ஆஞ்சநேயர் கோயில் விநாயகர் சன்னதி, பண்பொழி திருமலைக்குமாரசுவாமி கோயில் விநாயகர் சன்னதி, ஆய்க்குடி பாலசுப்பிரமணியசுவாமி கோயில் விநாயகர் சன்னதி, சிவராமபேட்டை கற்பக விநாயகர் கோயில், இலத்தூர், கணக்கப்பிள்ளைவலசை, மத்தளம்பாறை, சுந்தரபாண்டியபுரம், ஆயிரப்பேரி, வல்லம், காசிமேஜர்புரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி விநாயகர் கோயில்களில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடந்தது. இதனால் விநாயகர் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.