பதிவு செய்த நாள்
13
மே
2019
03:05
திருத்தணி:திரவுபதியம்மன் கோவிலில் நேற்று (மே., 12ல்), கொடியேற்றத்துடன் தீ மிதி திருவிழா துவங்கியது.
மேல்திருத்தணியில் உள்ள திரவுபதியம்மன் கோவிலில், நடப்பாண்டிற்கான தீ மிதி விழா, நேற்று (மே., 12ல்), கொடியேற்றத்துடன் துவங்கியது. காலையில், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.நேற்று 12 முதல், 26ம் தேதி வரை, தினமும், மதியம், 2:00 முதல், மாலை, 5:00 மணி வரை, மகாபாரத சொற்பொழிவும், இரவு நாடகமும் நடைபெறும். நாளை மறுநாள் (மே., 15ல்),, பாஞ்சாலி திருமணம், 17ம் தேதி சுபத்திரை திருமணம், 20ம் தேதி அர்ஜுனன் தபசு நடக்கிறது.இம்மாதம், 26ம் தேதி காலை, 9:30 மணிக்கு, துரியோதனன் படுகளம், மாலை, 6:30 மணிக்கு, தீ மிதி திருவிழா நடைபெறும்.வரும், 27ம் தேதி பகல், தர்மர் பட்டாபிஷேகத்துடன், தீ மிதி விழா நிறைவடைகிறது.