பதிவு செய்த நாள்
13
மே
2019
03:05
ஊத்துக்கோட்டை:ஆஞ்சநேயர் கோவிலில், 10க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பஜனை குழுவினர் சேர்ந்து, 12 மணி நேரம் தொடர்ந்து பஜனை பாடினர்.ஊத்துக்கோட்டை அடுத்த, பூண்டி ஒன்றியம், வெலமகண்டிகை கிராமத்தில் உள்ள வீர ஆஞ்சநேயர் கோவிலில், நேற்று, 10ம் ஆண்டு அனுமன் சாலிசா நிகழ்ச்சி நடந்தது. விடியற்காலை, 5:00 மணிக்கு, மூலவருக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், மஞ்சள் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களால், சிறப்பு அபிஷேக, ஆராதனை மற்றும் மகா தீபாராதனை காட்டப்பட்டது.
பின், காலை, 6:00 மணி முதல், மாலை, 6:00 மணி வரை, தொடர்ந்து, 12 மணி நேரம் அனுமன் சாலிசா பாடப்பட்டது. இதில், வெலமகண்டிகை, சென்னை, ஸ்ரீராமகுப்பம், பென்னலூர்பேட்டை, ராமநாதபுரம், பெரிஞ்சேரி, அனந்தாபுரம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பஜனை குழுவினர் பங்கேற்று, 108 முறை அனுமன் சாலிசா பஜனை பாடினர்.மாலை, 6:00 மணிக்கு மேல், மூலவருக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்து, சிறப்பு பூஜை நடந்தது.