குளச்சல் : மண்டைகாடு பகவதி அம்மன் கோயிலில் மூன்று நீண்ட கியூவரிசைகளில் இரண்டுமணிநேரம் காத்திருந்து லட்சமண்டைகாடு பகவதி அம்மன் கோயிலில்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் மாசிகொடைவிழா கடந்த நான்காம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. எட்டாம்நாள் விழாவான நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பக்தர்கள் கூட்டம் மிகஅதிகமாக காணப்பட்டது. கேரள மாநில பக்தர்கள் நேற்றுமுன் தினம் இரவே அதிக அளவு வரத்துவங்கினர். நேற்று முன் தினம் இரவு சாமிதரிசனத்திற்காக பக்தர்கள் நீண்டவரிசையில் காத்திருந்தனர். நேற்று காலைமுதல் பக்த்தர்கள் கூட்டம் அதிகமாக வரத்துவங்கியது. இதனால் கோயிலின் மேற்குபக்கரோடு மற்றும் கிழக்குப்பக்க ரோடுகளில் இரண்டுவரிசையாக கியூ அமைக்கப்பட்டது. மேலும் அதிகமாக பக்தர்கள் வரத்துவங்கியதால் கோயிலுக்கு முன்பக்க்ம் உள்ள லெட்சுமிபுரம் ரோட்டில் மூன்Ùவது கியூவரிசை ஏற்படுத்தப்பட்டது. இதàல் பக்தர்கள் இரண்டுமணி நேரத்திற்கும் மேலாக வரிசையில் காத்திருந்து சாமிதரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டது. ஒவ்வொரு வரிசைகளிலும் பக்தர்கள் சுமார் ஒருகிலோ மீட்டர் தூரம் வரிசையாக நின்றிருந்தனர். கடலில் கால்நனைப்பதற்காக அதிக அளவு பக்தர்கள் குவிந்திருந்தனர். கடற்கரையில் கூட்டம் அதிகரித்ததால் தீயணைப்புவீரர்கள் நீண்ட வடத்தை பிடித்து பாதுகாப்பு ஏற்படுத்தியிருந்தனர். மேலும் காலநனைத்த உடன் பக்தர்களை கடற்கரையைவிட்டு செல்லும்படி போலீசார் அறிவுறித்திக்கொண்டே இருந்தனர். நேற்று நள்ளிரவுவரை லட்சக்கணக்கான பக்தர்கள் மண்டைக்காடு பகவதி அம்மனை தரிசித்துச்சென்றனர்.