விழுப்புரம்: திருநகர் மகாலட்சுமி குபேரன் கோவிலில் 13ம் ஆண்டு சம்ரோக்ஷண தினம் மற்றும் ஏகதின லட்சார்ச்சனை விழா நடந்தது.விழாவினையொட்டி, காலை 6:00 மணிக்கு கோ பூஜை, லட்சார்ச்சனை நடந்தது. பகல் 12:00 மணியளவில் நவநரசிம்ம சத்சங்கம், கோவிந்தபுரம் சுந்தர வெங்கடேச பாகவதர் குழுவினரின் பஜனை, மாலை 3:00 மணிக்கு 5 கால லட்சார்ச்சனை நடந்தது.தொடர்ந்து இரவு 8:30 மணிக்கு சீனிவாச பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்து, உட்பிரகாரத்தில் வலம் வருதல் மற்றும் ஊஞ்சல் சேவை, மகா மங்களார்த்தி தீர்த்தம் வழங்குதல் நடந்தது. பூஜைகளை அர்ச்சகர் வரதராஜ பட்டாச்சாரியார் செய்து வைத்தார்.