பதிவு செய்த நாள்
12
மார்
2012
11:03
கூடலூர் : கூடலூர் வாழ கொல்லி மட்டம் அருள்மிகு செல்வகணபதி, முத்துமாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தது. கூடலூர் புளியம்பாறை கிராமம், வாழ கொல்லி மட்டம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள, அருள்மிகு செல்வகணபதி, முத்துமாரியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேக திருவிழா நேற்று முன்தினம் துவங்கியது. அன்று காலை 5.00 மணிக்கு விக்னேஷ்வர பூஜை உட்பட உபச்சார வழிப்பாடு நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று காலை 8.30 மணிக்கு இரண்டாம்கால யாகவேள்வி, மண்டப அர்ச்சனை, வேதீகார்ச்சனை,மஹாபூர்ணாகுதி நிறைவுவேள்வி பூஜை நடந்தன. தொடர்ந்து தீபாராதனை, வேததிருமுறை பாராணயம் உபச்சார வழிப்பாடும், 10.30 மணிக்கு செல்வ விநாயகர் மகா கும்பாபிஷேகம், தொடர்ந்து 11.00 மணிக்கு முத்துமாரியம்மன் மகா கும்பாபிஷேகம் நடந்தது. நெல்லியாளம் நகராட்சி தலைவர் அமிர்தலிங்கம், கவுன்சிலர் முருகையா, தேவாலா டி.எஸ்.பி., சுரேஷ்குமார், தேவர்சோலை பேரூராட்சி கவுன்சிலர் சுரேஷ்ராஜா உட்பட பலர் பங்கேற்றனர்.