அருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் மீனாட்சி சொக்கநாதர் கோயில் வளாக திருமண மண்டபத்தில், கண்பன் கழகத்தின் சொற்பொழிவு கூட்டம் நடந்தது.புரவலர் தினகரன் தலைமை வகித்தார்.
துணை செயலர் செல்வம் வரவேற்றார். மதுரை தியாகராஜர் கல்லூரியின் தமிழ்த்துறை உதவி பேராசிரியை செல்வராக்கு, ராமனை போற்றிய ஆழ்வார்கள் என்ற தலைப்பில் பேசினார். சத்தியசாயி குழுவினரின் பஜனைநடந்தது. விவேகானந்தா கேந்திராவின் புத்தக கண்காட்சி நடந்தது. ஏற்பாடுகளை துணை செயலர்கள் கோடீஸ்வரன், நாகராஜ், பால்ராஜ் செய்தனர். செயலாளர்கணேசன் நன்றி கூறினார்.