ராஜகோபால ஸ்வாமி கோவிலில் பங்குனி பிரம்ம உற்சவ திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12மார் 2012 11:03
மன்னார்குடி: மன்னார்குடி வைணவ ஸ்தலங்களில் புகழ்பெற்றதும், தென் துவாரகை, தென் திருப்பதி எனவும் ராஜகோபால ஸ்வாமி கோவில் அழைக்கப்படுகிறது. இங்கு ஆ ண்டுதோறும் நடக்கும் விழாக்களில் மிகவும் பிரசித்தி பெற்ற பங்குனி பிரம்ம உற்சவ திருவிழா இன்று (12ம் தேதி) கொடியேற்றத்துடன் துவங்குகிறது. பங்குனி பிரம்ம உற்சவ விழா தொடர்ந்து 30 நாட்கள் நடக்கிறது. இதில், பிரம்ம உற்சவம் மட்டும் 18 நாட்கள் நடக்கும். இந்நாளில் ஸ்ரீவித்ய ராஜகோபால ஸ்வாமி 18 வகையான அலங்காரத்தில், 18 விதமான வாகனங்களில் வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். அதைத்தொடர்ந்து, 12 நாட்கள் விளையாட்டு விழா நடத்தப்படும். விழாவில் கண்டபேரண்டபட்சி தங்க சூரிய பிரபை பல்லக்கு, வெள்ளி சேஷ வாகனம், தங்க கருட சேவை, வெண்ணெய் தாழி, வெட்டும் குதிரை, திருத்தேர் போன்ற விழாக்கள் சிறப்பாக நடக்கும். ஒவ்வொரு விழாக்களின் போதும் வாண வேடிக்கை, இன்னிசை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழாவை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளாக கலந்துகொள்வர்.