பதிவு செய்த நாள்
14
மே
2019
03:05
காஞ்சிபுரம் : அய்யங்கார்குளம் பகுதியில், பழமையான சஞ்சீவராயர் கோவில் உள்ளது. இதன் திருப்பணிக்காக, தொல்லியல் துறை வல்லுனர், ராஜேந்திரன், நேற்று (மே., 13ல்) ஆய்வு செய்தார். காஞ்சிபுரம் அடுத்த அய்யங்கார்குளம் பகுதியில், விஜயநகர பேரரசு காலத்தில் கட்டப்பட்ட, பழமையான சஞ்சீவராயர் கோவில் உள்ளது.இக்கோவில் ராஜகோபுரம் மற்றும் மண்டபம், பல ஆண்டுகளுக்கு முன் சிதிலமடைந்து விட்டது. அதை சீரமைக்க, இரு ஆண்டுகளுக்கு முன் பணி துவங்கியது; பல்வேறு காரணங்களால் முடங்கியது.
இந்நிலையில், அக்கோவிலில் திருப்பணி நடத்தி, கும்பாபிஷேகம் செய்ய, அறநிலையத் துறை ஆணையருக்கு, கோவில் நிர்வாகம் பரிந்துரை செய்தது. அதன்படி, தொல்லியல் துறை வல்லுனர், ராஜேந்திரன், நேற்று (மே., 13ல்) கோவிலை ஆய்வு செய்தார். திட்ட அறிக்கை சமர்பிக்கப்பட்டு, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, திருப்பணி துவங்கும் என, கோவில் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.