பதிவு செய்த நாள்
14
மே
2019
03:05
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம், சந்தவெளி அம்மன் கோவிலில் சித்திரை பெருவிழா விமரிசையாக நடைபெற்றது.காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சன்னிதி தெரு, தான்தோன்றீஸ்வரர் கோவில் அருகே, சந்தவெளி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் சித்திரை பெருவிழா மூன்று நாட்கள் நடைபெற்றது.
விழாவையொட்டி, கடந்த, 10ல், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாலையில், மங்கள இசை, சொற்பொழிவு மற்றும் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. 11ல், சொற்பொழிவு, பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.
நிறைவு நாளான நேற்று முன்தினம் (மே., 12ல்) காலை, 108 பால் குடங்களுடன் பூங்கரக புறப்பாடு, பகல், 12:00 மணிக்கு வர்ணிப்பு, கூழ் வார்த்தல் நடைபெற்றது.இரவு, மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மன் வீதியுலாவுக்கு பின், கும்பம் படையலிட்டு, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.