திருப்பதி: திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில் மழை வேண்டி, ஐந்து நாள் வருண ஜெபம் துவங்கப்பட்டுள்ளது. கோகர்ப்பம் தீர்த்தத்தில் துவக்கப்பட்ட இந்த யாகம் இங்குள்ள இதர நீர்நிலைகளிலும் தொடரும், ஒவ்வொரு நாளும் 8 மணி முதல் 12 மணி வரை இந்த யாகம் நடைபெறும். இந்த யாகம் வேதகாலத்தில் நடத்தியது போல நடத்தப்படுவது இதன் சிறப்பாகும். ஒவ்வொரு பொருளும் "கிருஷ்ணா வர்ண" (கறுப்பு நிறம்) மாக இருக்கும். மூங்கில் அரிசி, குதிரை போன்றவைகள் பயன்படுத்தப்படும்.