புதுச்சேரி :ரெட்டியார்பாளையம் மரியாள் நகர் மகாலட்சுமி கோவிலில், ஏழாம் ஆண்டு ஏகதின லட்சார்ச்சனை விழா நேற்று நடந்தது. காலை 6 மணிக்கு கலச ஸ்தாபனம், சுதர்சன ஹோமம், அஷ்டலட்சுமி ஹோமம், 7 மணிக்கு லட்சார்ச்சனை துவங்கியது. பகல் 2 மணி முதல் மாலை மணி வரை லட்சார்ச்சனை நடந்தது. மாலை 6 மணிக்கு அலங்கார திருமஞ்சனமும், 7 மணிக்கு லட்சார்ச்சனை நிறைவு நடந்தது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.