Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news வேதபுரீஸ்வரர் கோவிலில் 63 ... மாகாளியம்மன் கோவில் பூச்சாட்டு திருவிழா மாகாளியம்மன் கோவில் பூச்சாட்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செஞ்சி கமலக்கன்னியம்மன் திருத்தேர் விழா
எழுத்தின் அளவு:
செஞ்சி கமலக்கன்னியம்மன் திருத்தேர் விழா

பதிவு செய்த நாள்

15 மே
2019
12:05

செஞ்சி: செஞ்சிக்கோட்டை கமலக்கன்னியம்மன் கோவிலில் நடந்த தேர் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்தனர். செஞ்சிக்கோட்டை ராஜகிரி மலை மீது பல ஆயிரம் ஆண்டுகள் பழமையான கமலக்கன்னியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் இந்த ஆண்டு தேர் திருவிழா கடந்த 6ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

அன்று மாலை கமலக்கன்னியம்மன், ராஜகாளியம்மன், மாரியம்மனுக்கு பொங்கல் வைத்து சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்தனர். விழாவை முன்னிட்டு தினமும் பூங்கரகம் மற்றும் சுவாமி வீதியுலா நடந்தது. 9ம் நாள் விழாவாக நேற்று காலை மாரியம்மனுக்கு 108 பால் குட அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் நடந்தது. பகல் 12:00 மணிக்கு ராஜகிரி கோட்டை காளியம்மனுக்கு ஊரணி பொங்கல் வைத்து வழிபாடும், திரிசூலத்திற்கு சிறப்பு அபிஷேகமும் செய்யப்பட்டது. 2:00 மணிக்கு ராஜகிரி கோட்டை பிரதான வாயிலிலும், பீரங்கிமேடு மந்தை வெளியிலும் பாரம்பரிய முறைப்படி எறுமை கிடா பலி கொடுக்கப்பட்டது. தொடர்ந்து 41 அடி உயர தேரில் மாரியம்மன், கமலக்கன்னியம்மன் மற்றும் காளியம்மன் கோவில் திரிசூலத்தை ஏற்றி, சிறப்பு பூஜை செய்து மாலை 3:00 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் துவங்கியது. திருவள்ளுவர் தெரு, திருவண்ணாமலை ரோடு, விழுப்புரம் ரோடு, சந்திரத்தெரு வழியாக தேர் பவனி நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேர் வடம் பிடித்தனர். தானியம், காய்கறி, நாணயம் ஆகியவற்றை நேர்த்தி கடனாக தேரின் மீது வீசினர். விழா ஏற்பாடுகளை அறங்காவலர் அரங்க ஏழுமலை மற்றும் உபயதாரர்கள், விழா குழுவினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்துக்கு சென்னையை சேர்ந்த பக்தர் ஒருவர், ஐம்பொன்னால் செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு, மயில் வாகனத்தை பக்தர் ஒருவர் நன்கொடையாக ... மேலும்
 
temple news
கோவை: ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், எப்போ வருவாரோ ஆன்மிகத் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி, கிக்கானி ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு அம்மன் ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் மார்கழி தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar