ராஜபாளையம் :ராஜபாளையம் சொக்கர்கோயில் பிரம்மோற்சவ விழாவில் ஒன்பதாம் நாள் தேரோட்டம் நடந்தது. சொக்கர், மீனாட்சி தேரில் எழுந்தருளினர். காலை 6.45 மணிக்கு ராம்கோ குரூப் சேர்மன் பி.ஆர்.ராமசுப்பிரமணிய ராஜா துவக்கி வைத்தார். சங்கரன்கோவில் சைவ சித்தாந்த சபையினர் பஞ்ச புராணம், சிவ புராணங்களை பாடிக்கொண்டு சென்றனர். தெருக்களில் தேங்காய் உடைத்து வழிபாடு நடந்தது. காலை 8.30 மணிக்கு தேர் கோயிலை வந்தடைந்தது. சிறப்பு தீபாராதனைகள் நடந்தன.