பதிவு செய்த நாள்
13
மார்
2012
11:03
புளியரை : இலத்தூர் மாடசாமி, மாடத்தியம்பாள் கோயிலில் நாளை (14ம் தேதி) கும்பாபிஷேகம் நடக்கிறது. இலத்தூர் ஆதினம் காத்த ஐயனார் மாடசாமி, மாடத்தியம்பாள் கோயிலில் நாளை (14ம் தேதி) கும்பாபிஷேகம் நடக்கிறது. இதனை முன்னிட்டு நேற்று அதிகாலை மங்கள இசையுடன் விக்னேஷ்வர பூஜை, புன்யாகவாசனம், எஜமானர் அனுக்ஞை, மஹா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், சுதர்சன ஹோமம், கோ பூஜை, தீபாராதனை நடந்தது. மாலை வாஸ்து சாந்தி, பிரவேச பலி, மிருத்சங்கிரணம், பாலிகா ஸ்தாபனம், ரஷாபந்தனம், எஜமானர் ஆச்சார்ய வர்ணம், கும்ப அலங்காரம், காலகர்ஷணம், கடஸ்தாபனம், யாத்ரா ஹோமத்துடன் கும்பங்கள் யாகசாலை பிரவேசம், முதல் கால யாக பூஜைகள் நடந்தது. இன்று (13ம் தேதி) காலை இரண்டாம் கால யாகசாலை பூஜை, மாலை மூன்றாம் கால யாகசாலை பூஜை, இரவு அஷ்டபந்தன மருந்து சாத்துதல், எந்திர ஸ்தாபனம் நடக்கிறது. நாளை (14ம் தேதி) அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது. கும்பாபிஷேகத்தை சிவ ஆகமமுறைப்படி ஸர்வசாதகம் சத்யோஜாதசிவம் குமார் குருக்கள் நடத்துகிறார்.கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை ஈரங்கொல்லி இந்து சமுதாயத்தினர் மற்றும் சீவநல்லூர் பொதுமக்கள் செய்துள்ளனர்.