மண்ணச்சநல்லூர்: மண்ணச்சநல்லூர் தாலுகா ராஜாம்பாளையம் கீழூரில் மகா கணபதி, மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தாலுகா ராஜாம்பாளையம் கீழூரில் மகா கணபதி, மகா மாரியம்மன் கோவில்கள் கிராம மக்களால் புதிதாக திருப்பணி செய்யப்பட்டது. இக்கோயிலின் மகா கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகம் மார்ச் 10ம் தேதி கணபதி பூஜை, தன பூஜை, அஷ்டலட்சுமி பூஜை, வாஸ்து பூஜையுடன் துவங்கியது. அன்று கொள்ளிடத்திலிருந்து புனித நீர் கொண்டுவரப்பட்டது. இரவு ஒன்பது மணியளவில் நான்கு கால யாகசாலை பூஜைகள் துவங்கியது. நேற்று காலை 6.30 மணியளவில் கடம் புறப்பாடும், ஏழு மணிக்கு கோபுரகலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகமும் நடந்தது. 7.30 மணியளவில் மூலவருக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.