பதிவு செய்த நாள்
16
மே
2019
03:05
திருவள்ளூர்: திருவள்ளூர், பூங்கா நகரில், சிவ - விஷ்ணு கோவில் உள்ளது. இங்கு, நான்கு கரத்துடன், ஆகாயத்தை பார்த்தபடி அருள்பாலிக்கும் ஜலநாராயணி தாயார் உடனுறை ஜலநாராயண பெருமாளை, இக்கோவிலில் தத்ரூபமாக உருவாக்கி உள்ளனர்.
ஏகாதசியை முன்னிட்டு, நேற்று (மே., 15ல்), காலை, 8:00 மணிக்கு, லட்சுமி ஹயக்கிரீவருக்கு அபிஷேகம், காலை, 8.30 மணிக்கு, சீனிவாச பெருமாளுக்கு அபிஷேகம் நடந்தது.அதை தொடர்ந்து, ஜலநாராயணி தாயார் மற்றும் ஜலநாராயணருக்கு, காலை, 9:30 மணிக்கு, சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.பின், மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று, பெருமாளை வழிபட்டனர்.