பதிவு செய்த நாள்
16
மே
2019
03:05
திருத்தணி: திருத்தணி, அக்கைய்யநாயுடு சாலையில் உள்ள தணிகாசலம்மன் கோவிலில், வரும், 24ம் தேதி சண்டி ஹோமம் நடக்கிறது. இதையொட்டி, 23ம் தேதி காலையில், கணபதி ஹோமத்துடன் விழா துவங்குகிறது. வரும், 24ம் தேதி, காலை, 9:00 மணிக்கு, கலச அலங்காரம் மற்றும் சண்டி ஹோமம் நடைபெறும், மதியம், 12:00 மணிக்கு மூலவருக்கு கலசநீர் அபிஷேகம், 108 சங்காபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெறும்.மாலை, 5:00 மணிக்கு உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.