பதிவு செய்த நாள்
21
மே
2019
11:05
ஓசூர்: பேரண்டப்பள்ளி, தேசிய நெடுஞ்சாலைசர்வீஸ் சாலையில்,11 நாட்களாக நிறுத்தி வைத்திருந்த, கோதண்டராமர் சிலை, தென்பெண்ணை ஆற்றை கடக்க, தீவிர ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே, பேரண்டப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையோரம், 350 எடையுள்ள கோதண்டராமர் சிலை ஏற்றப்பட்டுள்ள கார்கோ லாரி,9ம் தேதி முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.பேரண்டப்பள்ளி தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே மண்ணை கொட்டி, தற்காலிக சாலை அமைக்கும் பணிகள்நடந்தன. கெலவரப்பள்ளி அணையில் இருந்து, தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் திறப்பால், தற்காலிக மண் சாலை பணி நிறுத்தப்பட்டது. இதையடுத்து, மாற்று ஏற்பாடாக, தற்காலிக மண் சாலைக்கு கீழே, சிமென்ட் குழாய்கள் அமைத்து, அதன் மூலம், ஆற்றுநீர் செல்ல வழி ஏற்படுத்தப்பட்டது.நேற்று காலை, ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு, 293 கன அடியாக குறைந்தது. இதனால், மண் சாலைப் பணிகள் வேகப்படுத்தப்பட்டன.நேற்று முழுவதும் பணிகள் நடந்த நிலையில், மழை வராமல் இருந்தால், 11 நாட்களாக காத்திருக்கும் கோதண்டராமர் சிலை, இன்று இரவுக்குள், தற்காலிக மண் சாலை வழியாக, தென்பெண்ணை ஆற்றை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.