கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் வைகாசி பெருவிழால் நேற்று முன்தினம் தெப்பல் உற்சவம் நடந்தது.
கடலுார் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவில் வைகாசி பெருவிழா கடந்த 9ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது.தினமும் காலை, இரவு சுவாமி வீதியுலா நடந்தது. கடந்த 17 ம் தேதி முக்கிய விழாவான தேரோட்டம் நடந்தது. 18ம் தேதி நடராஜருக்கு திருக்கல்யாண உற்சவமும், பஞ்சமூர்த்திகள் தீர்த்தவாரி நடந்தது. இரவு முத்துப்பல்லக்குகளில் பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடந்தது. நேற்று முன்தினம் இரவு திருக்குளத்தில் மின்விளக்கு அலங்காரத்துடன் கூடிய தெப்பத்தில் முருகப்பெருமான் வலம்வருதல் நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இன்று காலை 7:30 மணிக்கு திருஞானசம்பந்தர் ஞானப்பால் உண்ட ஐதீக நிகழ்ச்சி நடந்தது.