விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே முண்டியம்பாக்கத்தில் உள்ள ராகு பகவான் கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.
விக்கிரவாண்டி அடுத்த முண்டியம்பாக்கம் கூட் ரோட்டில் உள்ள பச்சை வாழியம்மன் கோவில் அருகே ராகு பகவானுக்கு தனியாக கோவில் கட்டப்பட்டது. அதன் கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த 17ம் தேதி மாலை 4:00 மணிக்கு கணபதி ேஹாமத்துடன் துவங்கியது.18ம் தேதி தன பூஜை, நவக்கிரக ஹோமத்துடன் முதல் கால யாகசாலை பூஜையும்; 19ம் தேதி இரண்டாம் கால யாகசாலை பூஜையும், மாலை 4:00 மணிக்கு மூன்றாம் கால யாக சாலை பூஜையும் நடந்தது.நேற்று 20ம் தேதி காலை 9:30 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜை முடிந்து, கடம் புறப்பாடாகி 10:00 மணிக்கு கோவில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி கைலாச ரவீந்திரநாத் தலைமையில் முக்கியஸ்தர்கள் செய்திருந்தனர்.